அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் சார்பில் "அன்னை விழா" கடைபிடிப்பு


அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் இன்று திருச்சிற்றம்பலம் அரங்கில் "அன்னை விழா" மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், பேராசிரியர் முனைவர் அன்னபூரணி அனைவரையும் வரவேற்று பேசினார். பின், அன்னை சாரதா தேவியின் உபதேச மொழிகள் குறித்து பள்ளி மாணவர்கள் மற்றும் பல்கலைக் கழக மாணவிகள் பலர் எடுத்துரைத்தனர்.

அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் முனைவர் மீனாட்சி சுந்தரம் தலைமையுரை ஆற்றினார். அப்போது அவர் கூறுகையில், ஜனவரி மாதத்தில் ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவில் குருபூஜை முடிந்தவுடன் நமது சாரதாலயத்தில் அன்னைக்கு எடுக்கப்படுகின்ற முக்கிய விழாவாக இது அமைந்திருக்கிறது என்றும், ஆன்மீகப் பணியை சமூகப் பணியாக ஆற்றி பொதுநோக்கத்தோடு தம் வாழ்நாள் முழுவதையும் ஆன்மீக முழுமை நிறைந்ததாக மாற்றியவர்கள் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும் சாரதாமணி தேவியாரும் ஆவர் என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை ஸ்ரீ சாரதா மடத்தின் ஆன்மீக பேச்சாளர் பிரவ்ரார்ஜிகாயதிந்திர பிராணா, "நவீன பெண்களுக்கு தூய அன்னை சாரதையின் உபதேசங்கள்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

நிரைவாக, வேதியியல் துறை பேராசிரியர் முனைவர் சாரதா நன்றியுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், துணை வேந்தர் முனைவர் பிரேமாவதி விஜயன், முன்னாள் துணை வேந்தர் முனைவர் சரோஜா பிரபாகரன் மற்றும் பேராசிரியர்கள், மாணவியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...